மயிலாடுதுறை, டிச.6 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எடக்குடி வடபாதி ஊராட்சியில் நடைபெற்றது.
545 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 429 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை வகிக்க, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தனர்.